Wednesday, December 10, 2014

ஆசிரியர்கள் 3

9 ஆவது வகுப்புக்குள் காலடி வைத்து காத்திருக்கின்றோம். உள்ளே நுழைகின்ற பாரதமணி டீச்சர் முதல் பார்வையிலேயே எங்களை ஈர்த்தார். நிமிர்ந்த நடை, பார்வையிலேயே அனைவரையும் ஈர்க்கும் கம்பீரம், தொடங்கிய விசயத்தை தடங்களில்லாது, ஒரு வார்த்தையையும் பிசிறில்லாது பேசி முடிக்கும் கம்பீரம், இப்படி எல்லாவற்றிலும் பார்வை, பேச்சு, நடை, உடை என ஒட்டுமொத்த கம்பீரமான பாரதமணி டீச்சர்.
       கதை சொல்லாமல் அறிவுரை சொல்லாமல் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆசைப்பட வைக்கும் செயல். எனது மனம், எப்பவும் இளமையாய் நினைக்க வைக்கும் மன அமைவு என்று எல்லாவற்றுக்குமான எனக்கான ஒட்டு மொத்த முன்மாதிரி பாரதமணி டீச்சர். இரண்டு வருடம் அவரது வகுப்பில் இருந்து இருந்து ஒரு கட்டத்தில் அவராகவே மாறிப் போனேன் என்பதுவே உண்மை.
      இரண்டு வருட வகுப்பில் ஒரு நாள் கூட ஒரு கணக்குப் பாடம் கூட மறதியாகவோ, தவறுதலாகவோ பிழையாகவோச் செய்ததே கிடையாது. ஒவ்வொரு வகுப்பிலும், 60 பிள்ளைகள் இருந்த போதும் கோபப்பட்டு ஒரு தடித்த வார்த்தையும் பேசியது கிடையாது

No comments:

Post a Comment