Thursday, November 26, 2015

PART 3

            அங்கிருந்து கிளம்பி பேருந்திலேயே நகரமும் சுற்றி வருகின்றோம். London eye எனப்படும் பெரிய ரங்கராட்டினம், தேம்ஸ் நதிக்கரை, புகைபோக்கிகளை பிரதானமாக்க கொண்ட வரிசை வீடுகள். புகைபோக்கிகள் தற்பொழுது    வீட்டை வெப்பமூட்ட எத்தனையோ மின்சார சாதனங்கள் வந்து விட்டாலும், பழமையைப் பேணும் மனோநிலை கொண்ட இங்கிலாந்துக்காரர்கள் ஒரு வீட்டின் பெருமையை அதன் புகை போக்கி அமைக்கப்பட்ட, அறையை வெப்பமூட்ட வைக்கப்படும் அடுப்பின் அமைப்பிலும் தான் தீர்மானிக்கின்றனர்.
       Loest miminter abbey என்ற இடத்திற்குப் போகின்றோம். அது அரசாங்க கட்டிடங்கள் முழுக்க இருக்க கூடிய இடம். மிகப்பெரிய மைதானத்தில் இன்றைய பார்லிமெண்ட், பழைய அரண்மனை தேம்ஸ் நதிக்கரையின் வடக்குகரையில் உள்ளது.    11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சதுக்கத்தில் நிற்கின்றோம். தற்பொழுது, காந்தி மண்டேலா போன்றோர்களின் சிற்பத்தை வைத்துள்ளனர்.1800களில் தீப்பிடித்து எரிந்த அரண்மனை இன்று புதுப் பொலிவுடன் நம் முன்னால் நிற்கிறது. சுற்றி மிகப்பெரிய கட்டிடங்கள், வானில் நீல நிறமோடு நகர்ந்து கொண்டே இருக்கும் மேகங்கள் நிலத்தில் இருந்த கட்டிடங்கள் அரண்மனை, மணிக்கூண்டு சர்ச் என எல்லாம் நகன்று கொண்டே இருப்பதாக காட்சி தருகின்றது.
            ஒட்டு மொத்த மருத்துவக் குழுவினரும் அங்கு அமர்ந்து படம் பிடித்துக் கொள்கின்றனர். நண்பர்கள் மத்தியில் இருந்து விலகிக் கொள்கின்றோம். நண்பர்களின்  மனைவிகளும் கணவர்களும்.
            புகைப்படம் எடுத்து முடித்தவுடன் கிளம்பி தேம்ஸ்  நதிக்கரை நோக்கி பயணமாகின்றோம். நாமெல்லாம் லண்டன் பாலம் என்று சொல்லுகின்ற டவர் பிரிட்ஜ்க்கு பேருந்தில் இருந்து இறங்கி நடந்து போகின்றோம். வழியில் நாயுடன் பலரும் நடை போய்க்கொண்டிருக்க ஒருவரின் நாய் தன்னுடைய அவசரத்தை நடு வீதியிலேயே முடிக்க உடனடியாக பையிலிருந்து ஒரு பாலிதீன் பையை எடுத்து அப்படியே கையில் மாட்டி அள்ளி எடுத்து குப்பை பெட்டி தேடி போடுகின்றார். இது வரமா, சாபமா என்று வாசிப்பவர் அக்கறைக்கே விட்டு விடலாம். டவர் பிரிட்ஜ் அருகே சென்று தேம்ஸ் நதிக்கரையின் சில்லிப்பை உணர்ந்த படி உலா போகின்றோம். எதிர்க்கரையில் நவீனத்தின் சாட்சியாக சின்ன வடிவம். என சொல்ல முடியாத கட்டிடங்கள் இங்கிலாந்து, ஜரோப்பிய முக்கிய நகரங்களில் ஒரு பக்கம் பழமையின் அடையாளங்களும், இன்னொரு பக்கம் நவீனத்துலகத்தின் வளர்ச்சியும் நாம் பார்க்க முடிகின்றது.
            அங்கிருந்து மேடம் துசா போய்ச் சேருகின்றோம். பிரபலங்களின் மெழுகுப் பொம்மைகள் இருக்கக்கூடிய இடம். உள்ளே நுழையும் முன்பு பசியெடுத்ததால் அருகில் இருந்த கடைகளில் பர்கரும், சாசேஜீம் வாங்கி சாப்பிடுகின்றோம். 
            மரியே துசாட்






எனும் பெண்மணி 1761ல் ப்ரான்ஸ் தேசத்தில் வசித்து வந்தாள். அவளுடைய அம்மா மெழுகு பொம்மைகள் செய்யக்கூடிய மருத்துவர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்தாள்.
            துசாட் தனது மெழுகு சிலையை வால்டயர் எனும் பிரானசு எழுத்தாளரின் உருவத்தை சிலையாகச் செய்தாள். பிரான்சு புரட்சியின் போது பாதிக்கப்பட்டவர்களின் உருவத்தை மெழுகு சிலையாக செய்தது புரட்சியின் ஒரு தருணமாக மாறிப்போக அவளது ஒட்டு மொத்த சேகரிப்புகள் பிரசித்தமாகத் தொடங்கின. லண்டனில் இருக்கும் இந்த அரங்கமே 1835ல் பெக்கர் தெருவில் ஒரு அருங்காட்சியகமாக ஆரம்பித்தது ஆகும்.             
            இப்பொழுது தற்பொழுதான பிரபலங்களும் இந்த சிலைகளின் வரிசையில் சேர்ந்துள்ளனர்.

    மறுநாள் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என்று தாமஸ் cook சொன்ன தகவல்களோடு  உறங்கச் சென்றாச்சு 

Monday, November 23, 2015

நாள் 2( 19.7.15)
      காலை உணவு முடித்து இரண்டு சொகுசுப் பேருந்துகளில் ஒட்டு மொத்த குழுவினரும் ஏறினோம் லண்டன் மாநகரை சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம் முக்கிய வீதிகளில் பேருந்திலிருந்தபடியே சுற்றி வந்தபடி இருந்தோம்.

        11மணிக்கு பக்கிங்காம் அரண்மனை முன்னால் அணிவகுப்பு நடப்பதைப் பார்க்க கூடினோம் எனது கணவரின் உடன் படித்த நண்பர்கள் 40 பேரும் அவர்களது குடும்பத்தினரும். எனவே கொண்டாட்டங்களுக்கும் கும்மாளத்திற்கும் அளவே இல்லை. யாரிடமும் அடுத்தவரோடு நிற்கின்றோம் என்ற அந்நியத்தன்மை இல்லாது அந்தக் குழு இருந்தது. பழங்காலக் கட்டிடங்கள், கண்ணாடி, மாளிகைகள், உயர்ந்து நிற்கும் தேவாலயங்கள், தேம்ஸ் நதிக்கரைகள் சொகுசுப்படகுகள், நினைவிடங்கள், வெற்றி நினைவு சின்னங்கள் நேர்கோட்டுத் தெருக்கள் வாத்தியங்கள் முழங்க காவலர்கள் மாறுவதை வேடிக்கை பார்க்கின்றோம். எங்கெங்கு பார்த்தாலும் selfie stick. தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சி எல்லா இடமும். யாரும் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதில்லை என்பதை விட, தன்னையே அதிகமாக உற்று நோக்க, எல்லாவற்றிலும் தான் மட்டுமே நிறைந்திருப்பதாக பழகிவிட்டார்கள். எடுத்தவுடன் அல்லது எடுக்கும் போதே, face bookல் போடுவதற்கான படம், profile picture, எது போட்டால் like கூட வரும் comment அதிகம் வரும் என சிந்தனைகள் ஒடுவதை வார்த்தைகளாகவே கேட்க முடிகிறது.











 

Saturday, November 21, 2015

1.30 சிவகாசியிலிருந்து கிளாம்பும் போதே பயணம் சவாலானதாக ஆகிவிடும் என்று யோசிக்க வில்லை. எப்பவும் பாஸ்போர்ட் , பயண ஆவணங்களை என்னுடையது என் கணவரதை என்னோடு வைத்துக் கொள்வதே வழக்கம். இந்த முறை அவர்  தனது ஆவணங்கலை தனியாக வேண்டுமென்றதால்  தனியாக தோள்பை ஒன்றில் எடுத்து வைத்திருந்தேன். மருத்துவமனை வேளைகள் முடித்து கடைசி நிமிடத்தில் கிளம்பிய போதும் வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு லைவ் கமெண்டிரி கொடுக்கின்ற ஆர்வத்தில் அவர் கையில் சேர்ப்பித்த பையை விட்டு விட்டு வண்டியேறிவிட்டார் ஏற்கனவே சரியாக 1. 15 மனீ நேரத்தில் போய் ஆகவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தோம். ஊர் எல்லை வந்த போது பாஸ்போர்ட் பை எங்கே என்று கேட்ட போது தான் வாட்ஸப்பிலிருந்து வெளியே வந்து என்கிட்ட இல்லையே என்று சொல்ல ப்தற்ரம் திற்ரிக் கொண்டது. இனி வீடு போய் எடுத்து கொண்டு வந்து கிலம்பினாலும் விமானத்தை விட்டு விட வேண்டியதுதான் என்ற நிலையில் மருத்துமனை வேலையில் இருந்தவருக்கு தகவல் சொல்லி வீட்டிலிருந்து பையை எடுத்து வர ஏற்பாடு செய்துவிட்டு காத்திருந்தோம்..பை கைக்கு வந்த பிறகு  எப்படிக் கிலம்பினாலும் 30 நிமிடத்தில் சிவகாசியிலிருந்து மதுரை போவது சட்தியமில்லை என்ற சவாலோடவே பயணம் துவங்கியது
சரியாக 35 நிமிடத்தில் மதுரை விமானநிலையத்தை வந்தடைந்து விமனத்தில் ஏரிய பிறகுதான்  மூச்சு நிதானமாகியது
4.15க்கு சென்னை வந்து சேர்ந்தோம் நிதர்ஷன் வந்து காத்திருந்தான். இன்னும் 2 மனி நேரம் இருக்கின்றது என்ற நிலையில்  அவனோடு பேசிக் கழித்த இரண்டு மணி நேரம் மிகவும்  மகிழ்ச்சியானது.

6.30 பையனிடமிருந்து விடைபெற்று விமானநிலையத்திற்குள் நுழைக்கின்றோம்   
9.30மணிக்கு எமிரேட்ஸ் விமானல் ஏறிt 3.15நிமிட நேரபயணம்
                 லண்டன் நேரப்படி 8.25 விமானம் தரையிறங்குகிறது. 12.15க்கு நோவாடெல் ஹோட்டலுக்கு வந்து சேர்கிறோம்  அறை கொடுக்கப் படஇன்னும் 2மணி நேரம் ஆகும் என்பதால் வரவேற்பறையில் காத்திருக்கிறோம். ஒருபுறம் தேம்ஸ் நதியிலிருந்து பிரிந்து வரும் நதியின் ஒரு பகுதி ஒருவில்லாய் ஒடிக் கொண்டிருக்கிறது. அதன் சிலிர்ப்பும் சூரியனின் சூடும் சேர்ந்து சுகமானதாக இருக்கின்றது குளிருக்கு உடுத்தும் ஆடைகளின் தேவை வெயில் காலத்திலும் இருக்கின்றது என்பது அப்பொழுது தான் புரிந்தது.
      வரவேற்பறையில் காத்திருக்கும் நேரத்தில் டீபாயில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள் தொடு திரையில் தெரிகின்றன. குழந்தையாகி கொண்டிருந்து விட்டு காத்திருக்கின்ற நேரத்தில் அருகில் இருந்த எமிரோட்ஸ் ஏர்லைன்ஸ் வின்ச்க்கு போனோம். அது தேம்ஸ் நதியைக் கடத்திக் கொண்டது. மனிதர்கள் விதவிதமான நாய்களோடு நடந்து கொண்டிருக்கின்றனர். உயரத்திலிருந்து நதியையும், நகரத்தையும் பார்க்கின்றோம். நாம் விஸ்வரூபம் எடுத்து இந்த உலகத்தை, பார்க்கத் தொடங்கி விடுகின்றோம். கடுகுப் பார்வையில் உலகம் துல்லியமாகவும், புள்ளிகளாகவும் தெரியத் தொடங்குகின்றது.
      எமிரேட்ச் நிறுவனம் விமானப் பயணம் எப்படிப்பட்டது. என்று குழந்தைகளுக்கு உண்ர்த்துவதற்கான கண்காட்சி வைத்திருந்தது. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். பைலட்டாக, பயணியாக பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு செல்கின்றார்கள். பாலத்தின் மேலே சாலை, அதனடியில் அலுவலகக் கட்டிடங்கள் என இடங்களை முழுவதும் பயன்படுத்தி இருந்தார்கள். தேம்ஸ் நதிக்கரையில் மேலிருந்து பார்க்க இரு இடத்தில் மணலைப் பரப்பி கடற்கரை போன்ற தோற்றத்தை தந்திருந்தார்கள் படகுகள், சாப்பாட்டு விடுதிகள் ஆகியிருந்தன. நதியில் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு பலர் நனைந்த உடையோடும் சிலர் மெடல்களோடும் கடந்த படி பீரித்தி வருவதற்காக காத்திருக்கின்றோம் ஹோட்டலில் எல்லாரும் லண்டன் eye ஏறக் கிளம்புகின்றார்கள். நாங்கள் செல்லவில்லை.
      உறவினர்களான  அவர்கள் வந்து சென்றதும் லிம்பம் நடத்தும் குறும்படநிகழ்ச்சிக்கு போகின்றோம். வழியெங்கும் பழைமை மாறாத புகை போக்கியுடன் கூடிய வீடுகள் 2005ல்  நான் வந்த போது இருந்த அதே தோற்றம் எதுவும் மாறவில்லை. ஈஸ்ட் காம்பில் (east ham) நடக்க இருக்கின்ற குறும்பட விழாவிற்கும் போகின்றோம். ஐந்து மாடிக்கு குறையாத கட்டிடங்கள் under grounder ற்க்கு தளமும் இருக்கின்றது. ஈஸ்ட் காம்பில் நுழைந்தது தமிழ் எழுத்துக்கள்  கடைகளின் பெயர் பலகைகளில்  தெரிகின்றன  கே.கே.ராஜா வரவேற்கிறார். பெளசர் மற்றும் எங்களை அழைத்துச் சென்ற சபேசன் ராஜா ஆகியோர் அங்கிருந்தனர்.  குறும்படங்கள் ஒடத்தொடங்குகின்றன, வெளியில் 7.30 மணிக்குப் பிறகும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. குளிரோடு அனைவரையும் சந்திக்கும்  விருப்பில் வந்திருந்தாலும்  உணர்வு இந்திய நேரத்தோடும் உடல் இங்கிலாந்து நேரத்தோடும் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த்து.
        தொடர்ந்து இருக்க முடியாது இடைவேளையின் போது யமுனா ராஜேந்திரன் பத்மநாபாஐயர் ஆகியோரை சந்தித்துவிடைபெற்றுக் கொண்டு கிளம்புகின்றேன். நான் மட்டுமானால் இருந்திருப்பேன் முழுநிகழ்விலும்.

அவர்கள் நிகழ்வில் என்னை கெளரவிக்க இருப்பதாக சொன்னார்கள். கணவரோடுவந்திருப்பதால் நிகழ்க்கு பொருத்தமில்லாத அவரை அதில் உட்கார வைத்ததின் குற்ற உணர்வோடு இருந்தேன். எனவே கிளம்ப வேண்டி இருந்தது 9மணிக்கு வெளியே வந்தால் இன்னும் சூரியன் மறையவில்லை. திரும்பி வந்து ஏதாவது சாப்பிட ஒரு உணவு விடுதியைத் தேடுகின்றோம். உணவுகளின் விலைப்பட்டியலில் 10பவுண்ட்ஸ் என்றாலே ஆயிரம் ரூபாயைத் தொட்டு விடுகிறது. குறைந்த விலைப்பட்டியலே 1000ரூபாயிலிருந்து தான் தொடங்குகின்றது.fish and chips இன்னும் சில fish items மும் வாங்கி சாப்பிட்டு விட்டு வெளியேறுகின்றோம். Londan eye பார்க்கச் சென்றவர்கள் திரும்பி வந்திருந்தார்கள். காலை7 மணிக்கு காலை உணவுக்கு வந்துவிட வேண்டும் எனச் சொல்லி அனுப்பி வைத்தனர் இந்த சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்த தாமஸ் குக் நிறுவனத்தினர். இனி பயணம் அவர்கள் கையில்