பெருங்காமம் பூக்கின்றது
நான்கு தசாப்தங்கள்
நகன்று விட்டதின் அடையாளத்தை
அவள் முந்ந ரை சொல்லிற்று
முதலிரண்டு தசாப்த உறவுகள்
வெளுத்து விட்ட கருமுடியாய்
காணாமல் போயிருந்தனர்
சிலநேரம் பௌதீகமாகவும்
பலநேரம் பௌதீகமாகவும்
இருபது வயது இளைஞன்
திடீரென அம்மாவாகி
எனக்கொருநாள்
நண்டூறுது நரியூறுது சொன்னபோது
பூட்டியிருந்த சிரிப்பு முகமூடிகள்
உதிர்ந்து
சிரிப்பு முதல் பூவாய்
பூத்து வாசம் வீசியது
பசியறிந்து உணவை
ஊட்டிய போது அம்மா
இளைஞனுக்குள் வந்திருந்தாள்
அவன் அம்மாவாகிப் போனதை
புரிய வைக்க முடியாமல் போன
அவஸ்தையிலும்
விழுங்கிய உணவு
கண்ணன் கைப்பருக்கையாய்
எல்லாவற்றையும் நிரப்புகின்றது
கண்ணனை கட்டி அணைக்கின்றேன்
காதல் உதிர்ந்து
அம்மாவின் முலை ஈந்த
பெருங்காமம் தீயாய் பூக்கின்றது
தாத்தனின் தழுவலில் இருந்த
அவன் அம்மா முகம்
தங்கையின் சிரிப்பு
காதலியின் மீண்டுமொரு பிறப்பு
எல்லாம் தீப்ப்பூவின் வாசத்தில்
வெளிச்சமாகிக் கொண்டிருந்தது