Thursday, November 26, 2015

PART 3

            அங்கிருந்து கிளம்பி பேருந்திலேயே நகரமும் சுற்றி வருகின்றோம். London eye எனப்படும் பெரிய ரங்கராட்டினம், தேம்ஸ் நதிக்கரை, புகைபோக்கிகளை பிரதானமாக்க கொண்ட வரிசை வீடுகள். புகைபோக்கிகள் தற்பொழுது    வீட்டை வெப்பமூட்ட எத்தனையோ மின்சார சாதனங்கள் வந்து விட்டாலும், பழமையைப் பேணும் மனோநிலை கொண்ட இங்கிலாந்துக்காரர்கள் ஒரு வீட்டின் பெருமையை அதன் புகை போக்கி அமைக்கப்பட்ட, அறையை வெப்பமூட்ட வைக்கப்படும் அடுப்பின் அமைப்பிலும் தான் தீர்மானிக்கின்றனர்.
       Loest miminter abbey என்ற இடத்திற்குப் போகின்றோம். அது அரசாங்க கட்டிடங்கள் முழுக்க இருக்க கூடிய இடம். மிகப்பெரிய மைதானத்தில் இன்றைய பார்லிமெண்ட், பழைய அரண்மனை தேம்ஸ் நதிக்கரையின் வடக்குகரையில் உள்ளது.    11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சதுக்கத்தில் நிற்கின்றோம். தற்பொழுது, காந்தி மண்டேலா போன்றோர்களின் சிற்பத்தை வைத்துள்ளனர்.1800களில் தீப்பிடித்து எரிந்த அரண்மனை இன்று புதுப் பொலிவுடன் நம் முன்னால் நிற்கிறது. சுற்றி மிகப்பெரிய கட்டிடங்கள், வானில் நீல நிறமோடு நகர்ந்து கொண்டே இருக்கும் மேகங்கள் நிலத்தில் இருந்த கட்டிடங்கள் அரண்மனை, மணிக்கூண்டு சர்ச் என எல்லாம் நகன்று கொண்டே இருப்பதாக காட்சி தருகின்றது.
            ஒட்டு மொத்த மருத்துவக் குழுவினரும் அங்கு அமர்ந்து படம் பிடித்துக் கொள்கின்றனர். நண்பர்கள் மத்தியில் இருந்து விலகிக் கொள்கின்றோம். நண்பர்களின்  மனைவிகளும் கணவர்களும்.
            புகைப்படம் எடுத்து முடித்தவுடன் கிளம்பி தேம்ஸ்  நதிக்கரை நோக்கி பயணமாகின்றோம். நாமெல்லாம் லண்டன் பாலம் என்று சொல்லுகின்ற டவர் பிரிட்ஜ்க்கு பேருந்தில் இருந்து இறங்கி நடந்து போகின்றோம். வழியில் நாயுடன் பலரும் நடை போய்க்கொண்டிருக்க ஒருவரின் நாய் தன்னுடைய அவசரத்தை நடு வீதியிலேயே முடிக்க உடனடியாக பையிலிருந்து ஒரு பாலிதீன் பையை எடுத்து அப்படியே கையில் மாட்டி அள்ளி எடுத்து குப்பை பெட்டி தேடி போடுகின்றார். இது வரமா, சாபமா என்று வாசிப்பவர் அக்கறைக்கே விட்டு விடலாம். டவர் பிரிட்ஜ் அருகே சென்று தேம்ஸ் நதிக்கரையின் சில்லிப்பை உணர்ந்த படி உலா போகின்றோம். எதிர்க்கரையில் நவீனத்தின் சாட்சியாக சின்ன வடிவம். என சொல்ல முடியாத கட்டிடங்கள் இங்கிலாந்து, ஜரோப்பிய முக்கிய நகரங்களில் ஒரு பக்கம் பழமையின் அடையாளங்களும், இன்னொரு பக்கம் நவீனத்துலகத்தின் வளர்ச்சியும் நாம் பார்க்க முடிகின்றது.
            அங்கிருந்து மேடம் துசா போய்ச் சேருகின்றோம். பிரபலங்களின் மெழுகுப் பொம்மைகள் இருக்கக்கூடிய இடம். உள்ளே நுழையும் முன்பு பசியெடுத்ததால் அருகில் இருந்த கடைகளில் பர்கரும், சாசேஜீம் வாங்கி சாப்பிடுகின்றோம். 
            மரியே துசாட்






எனும் பெண்மணி 1761ல் ப்ரான்ஸ் தேசத்தில் வசித்து வந்தாள். அவளுடைய அம்மா மெழுகு பொம்மைகள் செய்யக்கூடிய மருத்துவர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்தாள்.
            துசாட் தனது மெழுகு சிலையை வால்டயர் எனும் பிரானசு எழுத்தாளரின் உருவத்தை சிலையாகச் செய்தாள். பிரான்சு புரட்சியின் போது பாதிக்கப்பட்டவர்களின் உருவத்தை மெழுகு சிலையாக செய்தது புரட்சியின் ஒரு தருணமாக மாறிப்போக அவளது ஒட்டு மொத்த சேகரிப்புகள் பிரசித்தமாகத் தொடங்கின. லண்டனில் இருக்கும் இந்த அரங்கமே 1835ல் பெக்கர் தெருவில் ஒரு அருங்காட்சியகமாக ஆரம்பித்தது ஆகும்.             
            இப்பொழுது தற்பொழுதான பிரபலங்களும் இந்த சிலைகளின் வரிசையில் சேர்ந்துள்ளனர்.

    மறுநாள் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என்று தாமஸ் cook சொன்ன தகவல்களோடு  உறங்கச் சென்றாச்சு 

No comments:

Post a Comment