Monday, November 23, 2015

நாள் 2( 19.7.15)
      காலை உணவு முடித்து இரண்டு சொகுசுப் பேருந்துகளில் ஒட்டு மொத்த குழுவினரும் ஏறினோம் லண்டன் மாநகரை சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம் முக்கிய வீதிகளில் பேருந்திலிருந்தபடியே சுற்றி வந்தபடி இருந்தோம்.

        11மணிக்கு பக்கிங்காம் அரண்மனை முன்னால் அணிவகுப்பு நடப்பதைப் பார்க்க கூடினோம் எனது கணவரின் உடன் படித்த நண்பர்கள் 40 பேரும் அவர்களது குடும்பத்தினரும். எனவே கொண்டாட்டங்களுக்கும் கும்மாளத்திற்கும் அளவே இல்லை. யாரிடமும் அடுத்தவரோடு நிற்கின்றோம் என்ற அந்நியத்தன்மை இல்லாது அந்தக் குழு இருந்தது. பழங்காலக் கட்டிடங்கள், கண்ணாடி, மாளிகைகள், உயர்ந்து நிற்கும் தேவாலயங்கள், தேம்ஸ் நதிக்கரைகள் சொகுசுப்படகுகள், நினைவிடங்கள், வெற்றி நினைவு சின்னங்கள் நேர்கோட்டுத் தெருக்கள் வாத்தியங்கள் முழங்க காவலர்கள் மாறுவதை வேடிக்கை பார்க்கின்றோம். எங்கெங்கு பார்த்தாலும் selfie stick. தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சி எல்லா இடமும். யாரும் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதில்லை என்பதை விட, தன்னையே அதிகமாக உற்று நோக்க, எல்லாவற்றிலும் தான் மட்டுமே நிறைந்திருப்பதாக பழகிவிட்டார்கள். எடுத்தவுடன் அல்லது எடுக்கும் போதே, face bookல் போடுவதற்கான படம், profile picture, எது போட்டால் like கூட வரும் comment அதிகம் வரும் என சிந்தனைகள் ஒடுவதை வார்த்தைகளாகவே கேட்க முடிகிறது.











 

No comments:

Post a Comment