Sunday, June 7, 2015

உணர்வலைகள்

போதித்துக் கொண்டேயிருந்தாய்
உன் புத்திசாலித் தனங்களை
அதை நிரூபிப்பதற்கு சாட்சிக் கூண்டில்
எப்பவும் எதிராளிகளுக்கு
முட்டாள்கிரீடங்களை சூட்டியவாறே நீ

புத்திசாலித் தனங்கள்
மண்ணாக இருந்து
 உறிஞ்சிக் கொள்ளப் படுபவை அல்ல
சம்பவங்களூடாக நிகழ்த்தப் படுபவை
அது உன்னது போல்தானிருக்கும்  என்று
நம்பும் உன் பேதமையை
சொல்லிச் செல்கின்றபோது
அறுத்துக் கொள்கின்றாய் உணர்விலைகளை


No comments:

Post a Comment